“நகரம் உங்களைக் கண்காணிக்கிறது!” – City Watching You!!!
அஜித் முறைக்கிறார்; அபிஷேக் பச்சன் சிரிக்கிறார்; சோனம் கபூரும் ஆண்ட்ரியாவும் அழகு காட்டுகிறார்கள்; விஜய் யோசிக்க, அமீர்கான் ஆவேசமாகப் புறப்படுகிறார் – அறையின் சுவர் முழுக்க, கூரை முழுக்க விதவிதமான சினிமா ஸ்டில்கள். ‘மெல்லிசை’ பட அலுவலகமே கலர்ஃபுல்லாக இருக்கிறது.
”விஜய் சேதுபதிகிட்ட இந்தப் படத்தோட கதையைச் சொன்னேன். நான் கதை சொன்ன விதம் அவருக்குப் பிடிச்சிருச்சு. ‘இந்தக் கதையை நேரடியாச் சொன்னா, பாடம் எடுக்கிற மாதிரி ஆயிரும். நீங்க கமர்ஷியலா மாத்தினதால கேட்கவே நல்லா இருக்கு’னு சொன்னார். ஆனா, அவர்கிட்ட கால்ஷீட் இல்லை. ‘ஒரு வருஷம் காத்திருக்க முடியுமா?’னு கேட்டார். சரினு சொல்லிட்டு, வேற ஸ்கிரிப்ட் தயார் பண்ற வேலையில் இறங்கிட்டேன்.
திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு, ‘நான் பண்றதா இருந்த ஒரு படம் தள்ளிப் போகுது. இன்னும் 20 நாள்ல உங்களால் நம்ம படத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்க முடியுமா?’னு கேட்டார். நான், என் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ்., மூணு பேரும் ஒரு வருஷமா இந்தக் கதையோட டிராவல் பண்ணிட்டு இருக்கோம். அதனால், உடனே ஷூட்டிங் போனோம். இதோ, 50 நாள்ல படத்தை முடிச்சிட்டோம். விரைவில் ‘மெல்லிசை’ உங்களை மெய்சிலிர்க்கவைக்கும்!” – ஆர்வமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர், இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’ படத்தின் இயக்குநர்!
Source : Vikatan
For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in